search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் திடீர் சாவு
    X

    வாலிபர் திடீர் சாவு

    • அப்போது மோகன் ராஜுக்கு சோர்வு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார்
    • இது குறித்து கோபி போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், நம்பியூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). என்ஜினீயரிங் பட்ட தாரியான மோகன்ராஜ் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    மோகன்ராஜும், அவரது நண்பர் ஜெயபிரகாசும் கோபிசெட்டிபாளையம் நாயக்கன் காட்டில் உள்ள அவர்களது நண்பரான பிரசாந்த் என்பவரின் சோப் ஆயில் கம்பெனிக்கு சென்ற னர். அப்போது மோகன் ராஜுக்கு சோர்வு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார்.

    இதையடுத்து அவர் அங்குள்ள அறையில் சிறிது நேரம் படுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவரை நண்பர்கள் எழுப்பிய போது மோகன்ராஜீ எழ வில்லை. இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்த னர்.

    இதையடுத்து உடனடி யாக அவரை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.

    இது குறித்து கோபி போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    Next Story
    ×