என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தையை  கத்தியால் கழுத்தை அறுத்து கொன்ற மகன்
    X

    தந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்ற மகன்

    • ஆத்திரமடைந்த சிவானந்தா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தந்தையின் கழுத்தை அறுத்தார்.
    • ரத்த வெள்ளத்தில் வெங்கட்ரமணப்பா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேரிகையை அடுத்த திப்பேப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ரமணப்பா (வயது90). இவர் தனது சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வந்தார்.

    இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகனும், மகளும் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்தநிலையில் தனது மகள்களில் ஒருவரான சாலம்மா என்பவரது வீட்டில் தங்கி இருந்து வந்தார். இதன்காரணமாக சாலம்மாவின் மகளான அணிலாவிற்கு தனது சொத்தில் இருந்து 6 ஏக்கர் நிலத்தினை எழுதி வைத்தார். இந்த நிலையில் வெங்கட்ரமணப்பாவை அவரது மகன்களில் ஒருவரான சிவானந்தா என்பவர் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். நேற்று காலை சிவானந்தா தனது தோட்டத்திற்கு தந்தை வெங்கடரமணப்பாவை அழைத்து சென்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் பேத்தி அணிலாவுக்கு எழுதி கொடுத்த நிலத்தை திரும்பவும் உங்களது பெயருக்கே மாற்றி எழுதி வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினார்.

    கழுத்தை அறுத்து கொலை

    இதனால் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவானந்தா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தந்தையின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் வெங்கட்ரமணப்பா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அப்போது அங்கிருந்து சிவானந்தா தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து வெங்கட்ரமணப்பாவின் பேரன் ஹரிஷா என்பவர் சூளகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து வெங்கட்ரமணப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிவானந்தாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×