என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்மா உணவகத்தின் மேற்கூரை சரிந்து கீழே விழுந்ததால் பரபரப்பு
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே கடந்த 7 வருடங்களாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
- இந்த உணவகத்தின் மேற்கூறையின் சிறிது அளவு கூரை ஏற்கனவே பெயர்ந்து விழுந்தது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே கடந்த 7 வருடங்களாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் மேற்கூறையின் சிறிது அளவு கூரை ஏற்கனவே பெயர்ந்து விழுந்தது. இருந்தாலும் உணவகம் அதே இடத்தில் செயல்பட்டு வந்தது.
தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் காலை, மதியம் சாப்பிட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென மேற்கூரை (பால் சீலிங்) கீழே சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் அங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் அதிர்டவசமாக காயமின்றி தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story