search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முட்டை கொள்முதல் விலையை 30 பைசாவுக்கு மேல் குறைக்க கூடாதுதேசிய ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
    X

    முட்டை கொள்முதல் விலையை 30 பைசாவுக்கு மேல் குறைக்க கூடாதுதேசிய ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

    • நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இன்று மைனஸ் 30 என்ற அளவிற்கு மிகாமல் முட்டை விற்பனை செய்ய வேண்டும்.
    • ஈஸ்டர் முடிவடைந்ததால் வரும் நாட்களில் கேரளாவில் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இன்று மைனஸ் 30 என்ற அளவிற்கு மிகாமல் முட்டை விற்பனை செய்ய வேண்டும்.

    அவ்வாறு எவரேனும் 30 பைசாவுக்கு மேல் மைனஸ் கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள் அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவர் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    ஈஸ்டர் முடிவடைந்ததால் வரும் நாட்களில் கேரளாவில் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சந்தை நிலவரங்களை அனுசரித்து அறிவிக்கப்பட்ட மைனசிற்கு மட்டுமே முட்டைகளை விற்க வேண்டும்.

    அனைத்து பண்ணையாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த மைனஸ் என்ற விரும்பத் தகாத ஒன்றை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

    எனவே பண்ணையாளர்கள் அறிவிக்கப்பட்ட மைனசுக்கு மட்டுமே முட்டை விற்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

    Next Story
    ×