search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூக்களின் விலை கடும் சரிவு
    X

    தருமபுரி பூமார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கபட்டுள்ள பூக்கள்.

    பூக்களின் விலை கடும் சரிவு

    • தருமபுரி பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது தற்பொழுது கோடை வெயிலின் தாக்கத்தால் பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது.
    • செண்டு மல்லி கிலோ ரூ.20 என விற்பனை செய்யப்ட்டு வருகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக பல்வேறு கிராம பகுதிகளில் பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு விளையும் பூக்கள் வெளிமாநிலங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் ஒரு மாதமாக கோடை வெப்பம் 100 டிகிரிக்கு மேலாக வாட்டி வதைப்பதால் பூக்களுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டு பூக்கள் விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தற்பொழுது குண்டுமல்லி சீசன் தொடங்கியுள்ளது. வாசனை திரவங்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கு இன்னும் குண்டு மல்லி கொள்முதல் செய்யப்படா ததால் படு வீழ்ச்சியில் குண்டுமல்லி கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து தருமபுரி பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது தற்பொழுது கோடை வெயிலின் தாக்கத்தால் பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது . பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதால் விற்பனையும் குறைந்துள்ளது. இதனால் படுவீழ்ச்சியில் பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தனர். தருமபுரி பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி கிலோ ரூ.220 பன்னீர் ரோஸ் ரூ.40 ரூபாய், சம்பங்கி ரூ.30, கோழி கொண்டை ரூ.40, அரளி ரூ.80 , செண்டு மல்லி கிலோ ரூ.20 என விற்பனை செய்யப்ட்டு வருகிறது.

    Next Story
    ×