search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்த தொழிலாளி சாவு
    X

    விஷம் குடித்த தொழிலாளி சாவு

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனமுடைந்து காணப்பட்ட சீனிவாசன் வீட்டில் விஷம் குடித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள சீபம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது35). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது.

    இதில் மனமுடைந்து காணப்பட்ட சீனிவாசன் வீட்டில் விஷம் குடித்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×