search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்த பெண் சாவு
    X

    விஷம் குடித்த பெண் சாவு

    • குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
    • வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மாரி. கூலித்தொழிலாளியான இவரது கணவர் முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்த நிலையில் மாரி தனது தாயுடன் வசித்துவந்தார். அப்போது அவரது குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட மாரி நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பாரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×