search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்மந்தி இறுதிச்சடங்கு முடித்துவிட்டு வந்தவர் விபத்தில் பலி
    X

    சம்மந்தி இறுதிச்சடங்கு முடித்துவிட்டு வந்தவர் விபத்தில் பலி

    • பாஞ்சாலை யின் மாமியார் இறந்து இறந்துவிட்டதாக வேல்முரு கனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • சொர்க்க ரதம் வாகனம் அஜாகிரதையாகவும் கவனக்குறைவாகவும் வந்து அயோத்தி என்பவர் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    விருத்தாசலம் மாவட்டம் சின்ன பரூர் தாலுக்கா புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அயோத்தி (வயது 67). இவர்களுக்கு வேல்முருகன் என்ற மகனும் பாஞ்சாலை என்ற மகளும் உள்ளனர் பாஞ்சாலையை மேலூர் கிராமத்தில் சேர்ந்தவருக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் பாஞ்சாலை யின் மாமியார் இறந்து இறந்துவிட்டதாக வேல்முரு கனுக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. பாஞ்சாலை யின் இறுதி சடங்கில் பங்கேற்ப தற்காக மேலூர் வந்துள்ளார். பிறகு பாஞ்சாலையின் இறுதி சடங்கு முடித்துவிட்டு மேலூரில் இருந்து இந்திலி செல்லும் சாலையில் முருகா பாலிடெக்னிக் அருகே இடது ஓரமாக நடந்து சென்றுள்ளார்.

    அதே திசையில் வந்த சொர்க்க ரதம் வாகனம் அஜாகிரதையாகவும் கவனக்குறைவாகவும் வந்து அயோத்தி என்பவர் மீது மோதியது. இதில் பலத்த அடிபட்டு அதிக அளவில் காயம் ஏற்பட்டது இதனால் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசினர் பொது மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 11ஆம் தேதி அன்று பரிதாபமாக இறந்தார். வேல்முருகன் கொடுத்த புகாரில் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×