search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் கண்ணாமூச்சி காட்டும் உறைபனி சீசன்
    X

    நீலகிரியில் கண்ணாமூச்சி காட்டும் உறைபனி சீசன்

    • நவம்பர் மாதம் 2-வது வாரமே தொடங்க வேண்டியது
    • டிசம்பர் முதல் வாரத்தில் கொட்டி தீர்க்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

    ஊட்டி,

    தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு ஒருசில மாதங்கள் தவிர மற்ற காலங்களில் இதமான காலநிலை நிலவும்.

    எனவே தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் திரண்டு வருகின்றனர். அங்கு நிலவும் இதமான காலநிலை மற்றும் பச்சைப்பசேல் இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதியில் பனிப்பொழிவு தொடங்கும். இது பிப்ரவரி மாதம் இறுதி வரை நீடிக்கும்.

    அதிலும் குறிப்பாக நவம்பர் மாதம் 2-வதுவாரம் முதல் ஜனவரி மாத இறுதிவரை உறைபனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    மேலும்ஊட்டி, குந்தா, கோரகுந்தா, நடுவட்டம், பைக்காரா, சோலூர், கிளன்மார்கன், எமரால்டு, அப்பர்பவானி, அவலாஞ்சி, தாய்சோலை போன்ற இடங்களில் பனிப்பொழிவின் தாக்கம் சற்று கூடுதலாக காணப்படும்.

    அத்தகைய நேரங்களில் நீலகிரியின் பல்வேறு பகுதிகளில்பகல் நேரங்களில் பனிக்காற்று வீசும். எனவே வெயில் அடித்தாலும்கூட குளிர் வாட்டும்.

    மேலும் பனிப்பொழி வின்போது கோரகுந்தா மற்றும் அப்பர்பவானி போன்ற பகுதிளில் '0' டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை குறைந்து காணப்படும்.

    அங்கு தற்போது உறைபனி காலம் இன்றும் தொடங்கவில்லை. கண்ணா மூச்சி காட்டி வருகிறது. எனவே ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் முதல் வாரத்திற்கு மேல் உறைபனி மொத்தமாக கொட்டி தீர்க்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் மலைக்காய்கறி உள்ளிட்ட விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு உறைபனி கொட்டும்போது சாகுபடி மற்றும் மகசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    மேலும் நீலகிரியில் உறை பனிக்காலம் தொடங்கினால் அங்கு வசிக்கும் பொது மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும்.

    Next Story
    ×