search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் அரசு கல்லூரி கட்டுமான பணிகளை அமைச்சர்  ஆய்வு
    X

    தாராபுரம் அரசு கல்லூரி கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணிக்கு ரூ.12½ கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது.
    • கல்லூரி கட்டிட கட்டுமான பணிகள் குறித்து ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணிக்கு ரூ.12½ கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது. கட்டுமான பணிகளை கடந்த மாதம் 23-ந் தேதி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஐ.டி.ஐ. வளாகத்தில் தொடங்கி வைத்தனர்.

    அதன் முதற்கட்ட பணி தொடங்கி தற்போது நடந்து வருகிறது. கல்லூரி கட்டிட கட்டுமான பணிகள் குறித்து ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அமைச்சர் கூறியதாவது:- தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்–டும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல தற்போது பணி நடைபெற்று வருகிறது. அரசு கலைக்கல்லூரி கட்டிடம் நிர்ணயிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்–டும் என ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். மேலும் அதே வளாகத்தில் தாராபுரம் ஐ.டி.ஐ.க்கு ரூ.3 கோடியில் கட்டப்பட்டு வரும் ஆயுர்வேத கூட கட்டுமான பணிகளையும் அமைச்சர் கயல்விழிஆய்வு செய்தார்.

    Next Story
    ×