என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழிதகராறில் பெண்னை தாக்கியவர் கைது
    X

    வழிதகராறில் பெண்னை தாக்கியவர் கைது

    • 22-ம் தேதி மீண்டும் இவர்களுக்குள் வழிப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
    • 2 பேரும் சேர்ந்து கோவிந்தியை கையால் தாக்கியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள வளத்தனூர் பகுதியை சேர்ந்தவர் அழகேசன், இவரது மனைவி கோவிந்தி (வயது40), அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் வேடியப்பன் (47), இவர்களுடைய நிலம் அருகே அருகே உள்ளது. இதில் வழிப்பிரச்சினை நீண்ட நாட்களாக தீர்க்கபடாமல் இருந்து வருகிறது.

    இதனையடுத்து கடந்த 22-ம் தேதி மீண்டும் இவர்களுக்குள் வழிப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் வேடியப்பன் மற்றும் அவரது மனைவி சாந்தி(42) ஆகிய 2 பேரும் சேர்ந்து கோவிந்தியை கையால் தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த கோவிந்தி ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வேடியப்பனை கைது செய்தனர்.

    Next Story
    ×