என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூலித் தொழிலாளியை தாக்கி பதிவிட்ட விவகாரம்: நல்லம்பள்ளியை சேர்ந்த 3 பேர் கைது
Byமாலை மலர்17 July 2023 9:26 AM GMT
- கூலி தொழிலாளியான இவரை சம்பவத்தன்று 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்கி, சம்மந்தப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.
- இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி, கூலி தொழிலாளி பெருமாள் போலீசில் புகார் கொடுத்தார்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பெருமாள் (வயது45). கூலி தொழிலாளியான இவரை சம்பவத்தன்று 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்கி, சம்மந்தப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி, கூலி தொழிலாளி பெருமாள் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, கூலி தொழிலாளியை தாக்கி சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட விவகாரம் தொடர்பாக, நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனியை பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் (23), அபிஷேக் (21), சுந்தரமூர்த்தி (22) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இதில் தலைமறைவாகியுள்ள 17 வயது சிறுவனையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X