என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குடும்ப தகராறில் தீக்குளித்த கணவன் உயிரிழந்த நிலையில் இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு
- உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
- சிகிச்சை பலனின்றி காளி ரத்தினம் உயிரிழந்தார்.
கிருஷ்ணாபுரம்
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள சீராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளி ரத்தினம் (வயது 27). தொழிலாளி.
இவருடைய மனைவி ரம்யா (21). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது குடும்ப பிரச்சினை காரணமாக ரம்யா உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காளி ரத்தினம் தீயை அணைக்க முயன்றார்.
இதில் 2 பேருக்கும் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் 2 பேரையும் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளி ரத்தினம் உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரம்யாவும் உயிரிழந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்