search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப  தகராறில் தீக்குளித்த கணவன் உயிரிழந்த நிலையில் இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு
    X

    குடும்ப தகராறில் தீக்குளித்த கணவன் உயிரிழந்த நிலையில் இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு

    • உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
    • சிகிச்சை பலனின்றி காளி ரத்தினம் உயிரிழந்தார்.

    கிருஷ்ணாபுரம்

    தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள சீராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளி ரத்தினம் (வயது 27). தொழிலாளி.

    இவருடைய மனைவி ரம்யா (21). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது குடும்ப பிரச்சினை காரணமாக ரம்யா உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காளி ரத்தினம் தீயை அணைக்க முயன்றார்.

    இதில் 2 பேருக்கும் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் 2 பேரையும் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளி ரத்தினம் உயிரிழந்தார்.

    இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரம்யாவும் உயிரிழந்தார்.

    Next Story
    ×