search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை அறிவாளால் வெட்டிய கணவன்
    X

    மனைவியை அறிவாளால் வெட்டிய கணவன்

    • ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் மது போதையில் மனைவியை அறிவாளால் வெட்டிய கணவன் கைது
    • அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் காலனி தெருவை தெருவை சேர்ந்தவர் சங்கர் மனைவி ஐஸ்வர்யா (29) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளன .இந்நிலையில் சங்கர் இவரது மனைவி ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் அடிக்கடி இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் வீட்டிற்கு மது குடித்து விட்டு வந்த சங்கர் அவரது மனைவி ஐஸ்வர்யாவிடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்பு ஆத்திரமடைந்த சங்கர் வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து ஐஸ்வர்யாவின் இரண்டு கைகளிலும் மணிக்கட்டு பகுதியில் அரிவாளால் வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஐஸ்வர்யாவை அங்கிருந்த உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஐஸ்வர்யா சிகிச்சை பெற்று வருகிறார் . இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×