search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுதல் விலைக்கு உரங்கள் விற்றால் நடவடிக்கை விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை
    X

    கோப்பு படம்

    கூடுதல் விலைக்கு உரங்கள் விற்றால் நடவடிக்கை விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
    • கூடுதல் விலைக்கு உரங்கள் விற்றால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெ க்டர்முரளிதரன் தலைமை யில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    தேனி மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 829.80 மி.மீ ஆகும். தற்பொழுது வரை 109.58 மி.மீ மழை பெறப்பட்டு ள்ளது. இது மாத இயல்பான மழை அளவை காட்டிலும் 72.78 மி.மீ அதிகமாகும்.

    வேளாண்மை விரிவாக்க மையங்களில் நடப்பு பருவத்திற்கு விவசாயி களுக்கு விநியோகம் செய்யும் பொருட்டு நெல் விதைகள் 65.4 மெ.டன்னும், பயறு வகை விதைகள் 14.1 மெ.டன்னும், எண்ணெய்வி த்துப் பயிர் விதைகள் 27.8 மெ.டன்னும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1174 மெ.டன்னும், பொட்டாஷ் 835 மெ.டன் மற்றும் கலப்பு உரங்கள் 3256 மெ.டன்னும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்ட நிறுவன ங்களை மாத ஒதுக்கீட்டி ன்படி விநியோகம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உரம் கிடைப்பதில் பிரச்சினை மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது பற்றி வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு புகார் அளிக்க லாம். மேலும் ஒரு உரத்துடன் பிற உரங்களை வாங்கிட விவசாயிகளை கட்டாய ப்படுத்தும் உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்ய நட வடிக்கை கள் மேற்கொள்ள ப்படும் என தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் வேளா ண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செய ல்படுத்தப்படும் சொட்டுநீர் பாசன திட்டத்திற்கான மானியத் தொகை, பிம்.எம்.கிஷான் தொகை விவசாயி களுக்கு விரைந்து கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும், முருங்கை வளர்ப்பு திட்டத்திற்கு முன்னுரிமை, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் அனைத்து மக்களு க்கும் பயன்பெறும் வகை யில் செயல்படுத்திடவும், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியை பல்கலைக்கழ கமாக உயர்த்திட வேண்டும்.

    மேலும், அரசுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்திட வும், கொள்முதல் நிலைய ங்களில் வியாபாரிகளின் தலையீட்டை தடுத்து விவசாயிகள் பயன்பெற வழிவகை செய்திடவும், நெல் கொள்முதல் நிலை யங்களில் ஏற்படும் முறை கேட்டினை தடுக்க சுமைப்பணியாளர்களை டெண்டர் முறையில் தேர்ந்தெடுத்திடவும், படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயி கள் கலெக்டரிடம் முன் வைத்தனர்.

    விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை சம்மந்தப்பட்ட விவசாயி களுக்கு தெரிவிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

    Next Story
    ×