search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்கில் தவறி விழுந்த விவசாயி சாவு
    X

    பைக்கில் தவறி விழுந்த விவசாயி சாவு

    • திடீரென்று வண்டியின் கட்டுப்பாட்டை இழந்தால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • தலையில் பலத்த காயமடைந்த நாராயணப்பா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காலட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாராயணப்பா (வயது52). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.

    அப்போது திடீரென்று வண்டியின் கட்டுப்பாட்டை இழந்தால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த நாராயணப்பா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுசம்பவம் குறித்து சூளகிரி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து நாராயணப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×