என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து விவசாயி சாவு
- நேற்று காலை வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியை கடக்க முயன்றார்.
- அவர் அந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.
சூளகிரி, ஜூன்.20-
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த ஏனுசோனை தியாகரசன பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிக்கதிம்மய்யா (வயது70). இவரது மகன் ஹரீஷ். இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியை கடக்க முயன்றார்.
அப்போது அவர் அந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார். தொட்டியில் தண்ணீர் இல்லாததால் கீழே விழுந்ததில் சிக்கதிம்மய்யா பலத்த காயமடைந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஹரீஷ் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து சிக்கதிம்மய்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






