என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மரத்திலிருந்து விழுந்து விவசாயி பலி
- எதிர்பாரதவிதமாக தடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
- மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னச்சந்திரம் அருகேயுள்ள அவல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 50).
விவசாயியான காளியப்பன் தனக்கு சொந்தமான மரத்தில் ஏறி புளியம்பழம் பறிக்க முயன்றார்.
அப்போது எதிர்பாரதவிதமாக தடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.இதில் படுகாயம் அடைந்த அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் எல்லப்பன் கொடுத்த புகாரின்பேரில் குருபரபள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல தருமபுரி மாவட்டம் எச். கோபிநாதம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் (28) என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகேயுள்ள மல்லூரில் செல்போன் டவருக்கு குழிதோண்டும் பணியில் ஈடுபட்டார். குடிபோதையில் இருந்த சுரேஷ் அந்த குழிக்குள்ளேயே விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை முனுசாமி தந்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்