search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பி வேலியில் சிக்கி மான் சாவு
    X

    கம்பி வேலியில் சிக்கி மான் சாவு

    • கம்பி வேலியில் அதிவேகமாக மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மான் உயிரிழந்துள்ளது.
    • மானை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அ பள்ளிப்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மாரியம்பட்டி கிராமத்தில் பருத்திக்காடு பகுதியில் இருந்து அருகில் உள்ள வாழைத் தோப்பிற்கு கடந்து செல்ல மான் ஒன்று வேகமாக ஓடியது.

    அப்போது மானின் தலையில் உள்ள கொம்பு வாழை தோப்பிற்கு பாதுகாப்பாக சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வேலியில் அதிவேகமாக மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மான் உயிரிழந்துள்ளது.

    இது பற்றி மாரியம்பட்டி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வனத்துறை அதிகாரியான சாக்கன் சர்மா தலைமையில் மானை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அபள்ளிப்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×