என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரியிலிருந்து கீழே விழுந்து கிளீனர் சாவு
    X

    லாரியிலிருந்து கீழே விழுந்து கிளீனர் சாவு

    • லோடு ஏற்றும் பணியில் செல்வகுமார் ஈடுபட்டிருந்தார்.
    • செல்வகுமார் லாரியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (எ) இளையவன் (வயது 47). கிளீனராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று சப்பாநிபட்டி பகுதியில் லாரி ஒன்றில் லோடு ஏற்றும் பணியில் செல்வகுமார் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக செல்வகுமார் லாரியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில்கிடந்த செல்வகுமாரை தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து செல்வகுமாரின் அண்ணன் ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×