என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு வங்கியில் ஒரு மணி நேரம் ஒலித்த அபாய மணி
    X

    அரசு வங்கியில் ஒரு மணி நேரம் ஒலித்த அபாய மணி

    • புதுச்சத்திரத்தில் அரசுடமை யாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று குடியரசு தினத்தையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டி ருந்தது.
    • இந்த நிலையில் வங்கியில் நேற்று அபாய மணி திடீரென ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் வங்கிக்குள் புகுந்து இருக்க லாம் என்று கருதி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் அரசுடமை யாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று குடியரசு தினத்தையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டி ருந்தது.

    இந்த நிலையில் வங்கியில் நேற்று அபாய மணி திடீரென ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் வங்கிக்குள் புகுந்து இருக்க லாம் என்று கருதி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் வங்கியின் ஷட்டரை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு யாரும் நுழையவில்லை. இதனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக அபாய மணி ஒலித்து இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களும் நிம்மதி அடைந்தனர்.

    Next Story
    ×