search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்   தூய்மை பணிகள் தொடக்கம்
    X

    தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணிகள் தொடக்கம்

    • நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்றது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்றது.

    ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த தூய்மை பணி நடைபெற்றது.

    தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், தன்னார்வலர்கள் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் நீர் மேலாண்மை, சுகாதார மேலாண்மை , திடம் மற்றும் திரவக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    Next Story
    ×