search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துணிவு, வாரிசு படங்கள் வெளியானது:  தருமபுரி தியேட்டர்களில் திரண்ட ரசிகர்கள்
    X

    தருமபுரியில் துணிவு படம் வெளியான தியேட்டரில் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய காட்சி. 

    துணிவு, வாரிசு படங்கள் வெளியானது: தருமபுரி தியேட்டர்களில் திரண்ட ரசிகர்கள்

    • ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் தியேட்டர் முன்பாக நள்ளிரவில் பட்டாசுகளை வெடித்தனர்.
    • வெகுநேரம் காத்திருந்த ரசிகர்களின் கொந்தளிப்பால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    தருமபுரி,

    அஜித்குமார் நடிப்பில் துணிவு, விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய படங்கள் தியேட்டரில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் துணிவு திரைப்படம் நள்ளிரவு சரியாக 1 மணிக்கு வெளியானது.

    இந்நிலையில், வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு முதல்காட்சி வெளியாகியுள்ளது. தொடர்ந்து 7 மணிக்கு அடுத்த காட்சி வெளியானது.

    இந்த 2 படங்களும் ஒரே நாளில் வெளியாகியுள்ள நிலையில் தருமபுரியில் அஜீத், விஜய் இருவரின் ரசிகர்களும் நள்ளிரவு முதலே தியேட்டர்கள் முன்பு திரண்டனர்.

    சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் தியேட்டர் முன்பாக நள்ளிரவில் பட்டாசுகளை வெடித்தனர்.

    அரூரில் இன்று அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள், இரண்டு திரையரங்குகளில் ஔிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

    நள்ளிரவு 3 மணி அளவில் இருந்து காத்திருந்த ரசிகர் கூட்டம் இரண்டு திரையரங்குகளின் முன்பு அலைமோதிய நிலையில் விடியற்காலை 5 மணிக்கு சிறப்பு காட்சி வெளியிடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

    துணிவு திரைப்படம் 6:30 மணி அளவில் வெளியிடப்பட்டது. ஆனால் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியிடும் திரையரங்கில் நிர்வாகத்திற்கும், ரசிகர் மன்றத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி வெளியிடப்படுவதாக தெரிவித்து பின்பு 7.20 மணிக்கு இந்த படம் ஒளிபரப்பானது.

    வெகு நேரம் காத்திருந்த ரசிகர்கள், டிக்கெட் வாங்குவதற்காக அலைமோதிக் கொண்டனர்.

    அப்போது வாரிசு திரைப்படம் வெளியிட காலதாமதம் ஆனதால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்து நுழைவாயிலில் இருந்த இரும்பு தடுப்பை உடைக்க முயன்றனர். காவல் துறையினரின் சுமூக பேச்சுவார்த்தையால் திரைப்படம் ஔிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

    வெகுநேரம் காத்திருந்த ரசிகர்களின் கொந்தளிப்பால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×