search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புவனகிரி அருகே பயங்கரம்: வீடு புகுந்து பெண் கற்பழித்து கொலை
    X

    புவனகிரி அருகே பயங்கரம்: வீடு புகுந்து பெண் கற்பழித்து கொலை

    • புவனகிரி அருகே பயங்கரம்: வீடு புகுந்து பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.
    • கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீழ மணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல். அவரது மனைவி சீத்தா (வயது 45).

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீழ மணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல். அவரது மனைவி சீத்தா (வயது 45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துவேல் இறந்து போனார். எனவே சீத்தா தனியாக வசித்து வந்தார். தனது மகன், மகளுக்கு திருமணம் செய்துள்ளார். அவர்கள் தனி தனி வீட்டில் வசித்து வருகின்றனர்.

    சீத்தா சிதம்பரம் தனியார் ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து சீத்தா வீட்டில் தூங்கினார். இன்று காலை நீண்டநேரம் கதவு திறக் கப்படவில்லை. சந்தேக மடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது சீத்தா ரத்த காயங்களுடன் கிடந்தார். இதுகுறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க–ப்பட்டது. தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ் ராஜா, புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் அங்கு விரைந்தனர்.

    அப்போது சீத்தா காயங்களுடன் பினமாக கிடந்தார். அவரது ஆடைகள் அலங்கோலமாக இருந்தது. எனவே சீத்தாவை மர்ம நபர்கள் கற்பழித்து கொலை செய்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக முண்டியம் பாக்கம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். சீத்தாவை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எங்கு பதுங்கி உள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×