என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேன் மோதி வாலிபர் சாவு
- அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்து அவர் மீது மோதியது.
- தூக்கி வீசப்பட்ட பார்த்திபன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சானசந்திரம் பகுதியைச் சேர்ந்த ரங்கன் மகன் பார்த்திபன் (வயது 30). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று ஓசூர்-பெங்களூர் சிப்காட் ஜங்சன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பார்த்திபன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் உடனே அங்கு விரைந்து உடலை கபை்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






