search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரம்மதேசம் அருகே இருவேறு சாலை விபத்துகளில் வாலிபர் பலி - 3 பேர் படுகாயம்
    X

    பிரம்மதேசம் அருகே இருவேறு சாலை விபத்துகளில் வாலிபர் பலி - 3 பேர் படுகாயம்

    • வேலாயுதம் நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
    • 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 32). கூலித் தொழிலாளி. இவரும் அதே ஊரைச் சேர்ந்த ரவிக்குமார் (36) என்பவரும் நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். இவர்கள் திண்டிவனம் - மரக்காணம் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சொக்கனந்தாங்கலை சேர்ந்த முருகன் (32) மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்தார். 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேரும் பலத்த காயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம் - மரக்காணம் சாலையில் சொக்கனந்தாங்கல் சாலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். இவருக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கிடந்தது. தகவலின் பேரில் அங்கு வந்த பிரம்மதேசம் போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? விபத்தில் இறந்தாரா? அவர் மீது எந்த வாகனம் மோதியது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×