என் மலர்
உள்ளூர் செய்திகள்

எலி பேஸ்ட் தின்ற வாலிபர் சாவு
- தனது பைக்கை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார்.
- ஆசையாக வாங்கிய பைக்கை ஏன் அடமானம் வைத்தாய், பணம் வேண்டும் என்றால் என்னிடம் கேட்டிருக்கலாம் தானே என கூறியுள்ளார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ரம்யா தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 1 மகள் 2 மகன்கள் உள்ளனர். முதல் மகன் வேல்முருகன் (வயது 20) கார் டிரைவாக வேலை பார்த்து வந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் புதியதாக விலை உயர்ந்த மோட்டார் பைக் வாங்கினார்.
இந்நிலையில் தனது பைக்கை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். கடந்த 20-ம் தேதி வேல்முருகனின் தந்தைக்கு பைக் அடமானம் வைத்து கடன் வாங்கியது தெரிய வந்தது.
மகனிடம் ஆசையாக வாங்கிய பைக்கை ஏன் அடமானம் வைத்தாய், பணம் வேண்டும் என்றால் என்னிடம் கேட்டிருக்கலாம் தானே என கூறியுள்ளார்.
இதனால் வேதனையடைந்த வேல்முருகன் அன்றிரவு எலி பேஸ்ட் தின்று மயக்கமடைந்தார். இதனை கண்ட குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சையில் இருந்தவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






