என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி வாலிபர் சாவு
    X

    வாகனம் மோதி வாலிபர் சாவு

    • குருபரப்பள்ளி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது.
    • விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி, மே.12-

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பவளகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் விஜய் (வயது27).

    இவர் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அவர் குருபரப்பள்ளி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த குரபரப்பள்ளி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் என்ன? விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×