என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் மோதி வாலிபர் பலி
- தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்
- போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் முறையாறு அருகே நேற்று காலை புதுச்சேரி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபர் எதிர்பாராத விதமாக அரசு பஸ் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து மேல்செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






