என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

    • பெற்றோருக்கும் சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனவிரக்தி அடைந்த சரவணன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள மேட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சரவணன் (வயது30). கூலித் தொழிலாளி.

    இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோருக்கும் சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் மனவிரக்தி அடைந்த சரவணன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×