என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
    X

    விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

    • அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதால், குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் சின்னகால்வேஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சீலன். இவரது மகன் பசுபதி (வயது30). தொழிலாளி.

    இவருக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதால், குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரது மனைவி கோபித்துகொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக பசுபதி மனமுடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி அவர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கீழே விழுந்து கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பசுபதி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×