என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் விஷம்  குடித்து தற்கொலை
    X

    வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

    • சூர்யா சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் சூர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் முத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேசன். இவரது மகன் சூர்யா (வயது24). விவசாயியான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி எற்பட்டு வந்தது. இதன்காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலனில்லாமல் போனாது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சூர்யா சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சூர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×