search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி மதிப்புக் கூட்டுதல் செய்தவற்கான தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    தக்காளி மதிப்புக் கூட்டுதல் செய்தவற்கான தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • விவசாயிகள் உற்பத்தி செய்யும் தாக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.
    • மதிப்பு கூட்டுதல் செய்யப்பட்ட தக்காளி பொருட்களுக்கு சந்தையில் தேவைகள் அதிகமாக உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பாக ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தொழில் மானிய நிதியை கொண்டு, தக்காளி மதிப்புக் கூட்டுதல் செய்வதற்கான தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம், பெங்களூர் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்துடன், மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் நடந்தது.

    தொடர்ந்து வேளாண் தொழில்நுடப விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமானது புத்துணர்வு பெற்று பல மேம்பாடுகள் செய்யப்பட்டு, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் என பெயர் மாற்றம் செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் உலக வங்கியின் நிதியுதவியுடன் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படும் திட்டமாகும்.

    இந்த திட்டம் ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடனும் தொடங்கப்பட்டதாகும். தமிழக கிராம சூழலை மறு சீரமைக்க வெவ்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. வறுமை ஒழிப்பைத் தாண்டி நிலையான வாழ்வாதாரத்தை அமைத்து, அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஊரக நிறுவனங்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு தேவையான நிதியுதவிகளை அமைத்து தருவது, வேலைவாய்ப்புகள் உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    இந்த திட்டத்தின் மூலம் இந்த மாவட்டத்தில் ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், மாஞ்சோலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என 2 நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த 2 உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஆயிரம் நபர்கள் உள்ளனர். மேலும், ஆரம்ப கட்ட நிதியாக தலா ரு.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தொழில் விரிவாக்க நிதியாக தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பெற்றப்பட்ட தொழில் மானிய நிதியை கொண்டு தக்காளி மதிப்புக் கூட்டுதல் செய்வதற்கான தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தமானது, பெங்களூர் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கையொப்பமிடப்பட்டது. இதன் மூலம் ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யும் தாக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

    மேலும் மதிப்பு கூட்டுதல் செய்யப்பட்ட தக்காளி பொருட்களுக்கு சந்தையில் தேவைகள் அதிகமாக உள்ளது. விலையில் சரிவு ஏற்படு காலகட்டத்திலும் விவசாயிகள் நிலையான வருமானத்தை பெறுவர். இதனால் ஆயிரம் விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன், பெங்களூர் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் டாக்டர்.சஞ்சய் குமார் சிங், முதன்மை விஞ்ஞானிகள் வெங்கடகுமார், செந்தில்குமார், சங்கர், புவனேஸ்வரி, எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ், செயல் அலுவலர்கள் பிரதீப்குமார், சிவக்குமார், சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×