search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாலைமலர் செய்தி எதிரொலி: அரசு டாஸ்மாக் மதுபான கடை இடமாற்றம்
    X

    நல்லம்பள்ளி அருகே டாட்டா நகர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அரசு டாஸ்மாக் கடையை படத்தில் காணலாம்.

    மாலைமலர் செய்தி எதிரொலி: அரசு டாஸ்மாக் மதுபான கடை இடமாற்றம்

    • போதை தலைக்கேறிய நிலையில் அங்கிருக்கும் வயதான பெண்கள் உள்ள வீடுகளின் முன்பு விழுந்து கிடப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
    • கொட்டாவூர் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் மதுபான கடை, நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான் கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட டாட்டா நகர் பகுதிக்கு இட மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட அதியமான் கோட்டை மற்றும் வடக்கு தெரு கொட்டாவூர் பகுதி யில் இரண்டு அரசு டாஸ்மாக் மதுபான கடை கள் செயல்பட்டு வந்தன.

    இந்நிலையில் இப்பகுதி யில் அதிக அளவில் குடிமகன்கள் நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை, சேசம்பட்டி, புறவடை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் அதிக அளவில் மது அருந்த குவிந்து வந்தனர்.

    அதிகளவில் மதுப்பிரி யர்களால் நிறைந்து வந்த அரசு மதுபான கடைகள் கடந்த ஒரு வருடங்களாகவே கடைக்கு வரும் குடி மகன்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

    அதற்கு முக்கியமாக சந்துக்கடைகள் அதிகரித்தது தான் காரணம் என பல்வேறு புகார்கள் இருந்தது. மேலும் அவற்றில் கள்ள மதுபானங்களோடு சேர்த்து கலப்பட மதுபானமும் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

    இதன் காரணமாக அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட சந்துக் கடைகள் முழுமையாக மூடப்பட்டன.

    இதனால் மீண்டும் அதியமான் கோட்டை மற்றும் வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு மது பிரியர்கள் குவிந்து வந்தனர்.

    இதனால் அப்பகுதியில் கிராமங்கள் வழியாக வரும் பொழுது பல்வேறு இன்னல்கள் மற்றும் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன.

    சில நேரங்களில் விபத்துக்கள் குறிப்பாக வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் தெருக்கள் வழியாக வரும் பொழுது மதுபோதை யில் தள்ளாடியபடி வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துகின்றனர்.

    போதை தலைக்கேறிய நிலையில் அங்கிருக்கும் வயதான பெண்கள் உள்ள வீடுகளின் முன்பு விழுந்து கிடப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

    இது குறித்து மாலை மலர் நாளிதழில் பொது மக்களுக்கு அதிக அளவில் டாஸ்மாக் கடைக்கு செல்லும் குடிமகன்களால் பாதிப்பு ஏற்படுகிறது என செய்திகள் வெளியிடப் பட்டிருந்தன.

    அதன் காரணமாக தற்பொழுது வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் மதுபான கடை, நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான் கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட டாட்டா நகர் பகுதிக்கு இட மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

    Next Story
    ×