search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே டிராக்டர் மீது டேங்கர் லாரி மோதல்ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே டிராக்டர் மீது டேங்கர் லாரி மோதல்ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    • கியாஸ் காலி டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
    • 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    சேலத்திலிருந்து சென்னைக்கு கியாஸ் காலி டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த ராமச்ச ந்திரன் ஓட்டி வந்தார். இந்த டேங்கர் லாரி திருவெண்ணைநல்லூர் அருகே சித்தானங்கூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது. அப்போது சாலையைக் கடக்க முயன்ற டிராக்டர் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் கவிழ்ந்தது. டிராக்டரின் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது.

    இந்த விபத்தினால் நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த திருவெண்ணை நல்லூர் போலீசார், போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

    Next Story
    ×