search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கறம்பக்குடியில் கிராமிய பாடகரை தாக்கிய வழக்கில் வாலிபர் கைது
    X

    கறம்பக்குடியில் கிராமிய பாடகரை தாக்கிய வழக்கில் வாலிபர் கைது

    • காயம் அடைந்த இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • நவீனை கைது செய்த போலீசார் மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையுர் ஆயிப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது27). கிராமிய பாடகர்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    மோலுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது, அதிரான்விடுதியை சேர்ந்த தேவா, நவீன் மற்றும் இவர்களது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து பிரகாஷ் வந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரகாஷையும், கபிலனையும் பாட்டில்கள், கம்பிகளால் தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த இவர்கள் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நவீனை கைது செய்த போலீசார் மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×