என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து இளம்பெண் கழுத்தை அறுத்து படுகொலை: காதலன் வெறிச்செயல்
    X

    தனியார் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து இளம்பெண் கழுத்தை அறுத்து படுகொலை: காதலன் வெறிச்செயல்

    • மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் சத்யஸ்ரீயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.
    • காதலியை கழுத்தை அறுத்து கொன்று காதலன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அவிநாசியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் சத்ய ஸ்ரீ(வயது 21). இவர் திருப்பூர் குமார்நகர் 60 அடி சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்தவர் நரேந்திரன் (25). இவரும், சத்யஸ்ரீயும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்தனர். கடந்த சில நாட்களாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சத்யஸ்ரீ நரேந்திரனுடன் பேசுவதை நிறுத்தினார்.

    இந்தநிலையில் இன்று காலை நரேந்திரன் சத்யஸ்ரீ வேலை பார்த்து வரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு வந்ததும் 2பேருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யஸ்ரீயின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் நரேந்திரனும் தனது கழுத்தை கத்தியால் அறுத்து கொண்டார். இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனைப்பார்த்த ஆஸ்பத்திரி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் உயிருக்கு போராடிய நரேந்திரனை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சத்யஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் சத்யஸ்ரீயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் சத்யஸ்ரீயின் உடலை பார்த்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

    நரேந்திரன் கழுத்தை அறுத்து கொண்டதால் அவரால் பேச முடியவில்லை. அவர் பேசினால்தான் இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் குறித்து முழு தகவலை பெற முடியும். இருப்பினும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் தனியார் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காதலியை கழுத்தை அறுத்து கொன்று காதலன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×