search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியபாளையம் அருகே நெல் மூட்டைக்குள் சிக்கி தொழிலாளி மூச்சுத்திணறி மரணம்
    X

    பெரியபாளையம் அருகே நெல் மூட்டைக்குள் சிக்கி தொழிலாளி மூச்சுத்திணறி மரணம்

    • அரிசி ஆலையில் நேற்று காலை நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துவிட்டு தொழிலாளி அருகில் அமர்ந்து கொண்டு இருந்தார்.
    • எதிர்பாராத விதமாக மூட்டைகள் சரிந்து வாலிபர் மீது விழுந்தது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம், மாளந்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை ஒன்று இயங்குகிறது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காளி முக்கியா (வயது 25) என்ற வாலிபர் தனது குடும்பத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி இருந்து பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில், நேற்று காலை அரிசி ஆலையில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துவிட்டு அருகில் அமர்ந்து கொண்டு இருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக மூட்டைகள் சரிந்து வாலிபர் மீது விழுந்தது. இதில் மூச்சு திணறி உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து வாலிபரின் சகோதரி நித்திஷ் முக்கியா பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×