என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலி
- அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
- சிவப்பா மீது திடீரென மின்னல் தாக்கியது. இதனை பார்த்து மஞ்சுளா அதிர்ச்சி அடைந்தார்
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ராமசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா (வயது46). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த தம்பதிகள் ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு இவர்கள் சாப்பிட்டு விட்டு வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அனைவரும் தனித்தனியாக படுத்து இருந்தனர்.
அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது சிவப்பா மீது திடீரென மின்னல் தாக்கியது. இதனை பார்த்து மஞ்சுளா அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கூச்சல் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மஞ்சுளாவுக்கு கை, கால் உள்ளிட்ட பகுதியில் கொப்பளம் ஏற்பட்டது.
இது பற்றி தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மின்னல் தாக்கியதில் படுகாயம் அடைந்த மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மின்னல் தாக்கி இறந்த சிவப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்