search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்குன்றம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
    X

    செங்குன்றம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

    • குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா என்பவரிடம் முறையிட்டுள்ளனர்.
    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செங்குன்றம்- ஆவடி நெடுஞ்சாலை ஈஸ்வரன் நகர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த பம்மது குளம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுநாயக்கன் நகர் உள்ளது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா என்பவரிடம் முறையிட்டுள்ளனர். அவர் சரிவர பதில் கூறவில்லை என தெரிகிறது.

    இதனால் இன்று காலை 8.30 மணி அளவில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செங்குன்றம்- ஆவடி நெடுஞ்சாலை ஈஸ்வரன் நகர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததால் ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இந்த சாலை மறியலால் 2 மணி நேரம் ஆவடி- செங்குன்றம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×