என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோபிசெட்டிபாளையம் அருகே மகனுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண்
- கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் லோகநாதன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளார்.
- கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் லோகநாதன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம் பாளையம், ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (56). இவர் அங்குள்ள ஒரு தனியா ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பத்மாவதி (38). இவர்களுக்கு ஹரிபுவனேஷ்(12) என்ற மகன் உள்ளார். இவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் லோகநாதனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லோகநாதன் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் வீட்டில் வறுமை வாட்டியது.
இதன் காரணமாக லோகநாதன் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் லோகநாதன் திணறி வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் லோகநாதன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று லோகநாதன் கோபியில் உள்ள ஒரு பூங்காவிற்கு சென்றார். அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் லோகநாதனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு லோகநாதன் பரிதாபமாக இறந்தார்.
கணவனின் உடலை பார்த்து பத்மாவதியும், அவரது மகனும் கதறி அழுதனர். இதனையடுத்து இன்று காலை பத்மாவதி தற்கொலை செய்ய முடிவு எடுத்து விஷத்தை குடித்துள்ளார். பின்னர் தனது மகனுக்கும் விஷத்தை கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் பத்மாவதியும் அவரது மகனும் மயங்கி விழுந்தனர்.
அக்கம் பக்கத்தினர் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவர்களை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இருவரும் அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்