என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பம்மல் அருகே எலியை பிடிக்க துரத்தி சென்ற பெண் தவறி விழுந்து பலி
- வீட்டு வாசலில் எலி வருவதை கண்ட லட்சுமி அதனை அடிப்பதற்காக துரத்தி சென்றார்.
- அப்போது நிலைதடுமாறி வீட்டின் வாசலில் இருந்த படிக்கட்டில் விழுந்தார். அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தாம்பரம்:
சென்னை பம்மல் அடுத்த பொழிச்சலூர் பாபு தெருவை சேர்ந்தவர் லட்சுமி (35). இவரது கணவர் செந்தில். லோடு வேன் டிரைவராக உள்ளார்.
நேற்று இரவு செந்தில் வேலைக்கு சென்ற நிலையில் லட்சுமி வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டு வாசலில் எலி வருவதை கண்ட லட்சுமி அதனை அடிப்பதற்காக துரத்தி சென்றார்.
அப்போது நிலைதடுமாறி வீட்டின் வாசலில் இருந்த படிக்கட்டில் விழுந்தார். அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை கண்ட உறவினர்கள் லட்சுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சங்கர்நகர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்