என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜாபாத் அருகே அண்ணனை அடித்து கொன்ற தம்பி
    X

    வாலாஜாபாத் அருகே அண்ணனை அடித்து கொன்ற தம்பி

    • அண்ணன்-தம்பி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
    • கொலை தொடர்பாக வடிவேலுவை கைது செய்து மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அடுத்த கருக்குப்பேட்டையை சேர்ந்தவர் சரவணன் (வயது51). தொழிலாளி. இவரது மனைவி காந்திமணி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    அதே பகுதியில் இவரது கடைசி தம்பி வடிவேலு தாயுடன் தனியாக வசித்து வருகிறார். வடிவேலுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    சரவணன், வடிவேலு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அவர்களை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர். நேற்று இரவும் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் தூங்க சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையும் அண்ணன்-தம்பி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    அப்போது சரவணன் கோபத்தில் வடிவேலுவின் கைவிரலை கடித்ததாக தெரிகிறது. இதனால் வலியால் அலறி துடித்த வடிவேலு அருகில் கிடந்த கட்டையால் அண்ணன் சரவணனை சரமாரியாக தாக்கினார். இதில் சரவணன் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்ததும் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், டி.எஸ்.பி. ஜுலியர்சீசர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த கொலை தொடர்பாக வடிவேலுவை கைது செய்து மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    அண்ணனை தம்பி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×