search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாசர்பாடி அருகே ரூட்டு தல மோதலில் மின்சார ரெயிலுக்குள்கல்லூரி மாணவர்கள் கல்வீசி தாக்குதல்
    X

    வியாசர்பாடி அருகே ரூட்டு தல மோதலில் மின்சார ரெயிலுக்குள்கல்லூரி மாணவர்கள் கல்வீசி தாக்குதல்

    • பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் நின்றதும் கல்லூரி மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
    • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரெயில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர். மின்சார ரெயில் வியாசர்பாடி-பேசின் பிரிட்ஜ் இடையே உள்ள ராமலிங்கம் கோவில் அருகே சென்றபோது இருதரப்பு கல்லூரி மாணவர்கள் இடையே ரூட்டு தல தொடர்பாக மோதல் ஏற்பட்டது.

    அப்போது திடீரென அவர்கள் மின்சார ரெயிலுக்குள்ளேயே கற்கறை வீசி தாக்கிக்கொண்டனர். அந்த நேரத்தில் திருப்பதி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ்ரெயில் மீதும் கல்விழுந்தது. இதில் ரெயிலில் பயணம் செய்த பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் நின்றதும் கல்லூரி மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×