என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விருத்தாசலம் அருகே 13 வயது சிறுவன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி- தந்தை கைது
Byமாலை மலர்9 Aug 2022 6:47 AM GMT (Updated: 9 Aug 2022 7:01 AM GMT)
- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு. அவரது மகன் கதிர்வாணன்(வயது 13). இவர் இன்று காலை வயலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் மலர்விழி (3) தனது வீட்டுமுன்பு விளையாடி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் கதிர்வாணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிறுமி மலர்விழி மீது மோதியது. இந்த விபத்தில் சிறுமி துடி துடித்து இறந்தாள்.
இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குபதிந்து சிறுவனின் தந்தை சிவகுருைவ கைது செய்தனர். கைதான அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல விபத்தை ஏற்படுத்திய சிறுவன் கதிர்வாணனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X