என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சென்னிமலை அருகே கிராம மக்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
- கடந்த மாதம் 2-ந்தேதி நடந்து முடிந்த கிராம சபை கூட்டத்தில் பாலதொழுவில் உள்ள குளத்திற்கு சிப்காட் சாய கழிவு நீர் வரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு தனியாக ஒரு பூட்டு போட்டு பூட்டி விட்டு சென்று விட்டனர்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், புஞ்சை பாலதொழுவு ஊராட்சியில் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பஞ்சாயத்து தலைவர் தங்கமணி விஜயகுமார் தலைமையில் நேற்று கூட்டம் தொடங்கிய நிலையில் கடந்த மாதம் 2-ந்தேதி நடந்து முடிந்த கிராம சபை கூட்டத்தில் பாலதொழுவில் உள்ள குளத்திற்கு சிப்காட் சாய கழிவு நீர் வரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும் தொடர்ந்து சாயகழிவு நீர் வந்து கொண்டுள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரியும், மாவட்ட கலெக்டர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி நடக்க இருந்த கிராமசபை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று புஞ்சை பால தொழுவு ஊராட்சி துணைத்தலைவர் பிரியாவின் கணவர் சுப்பிரமணி, சென்னிமலை யூனியன் 11-வது வார்டு கவுன்சிலர் தங்கவேல், சிப்காட்டால் பாதிக்கப்பட்டோர் மக்கள் நல சங்கம் சார்பில் பிரபு, மணி உட்பட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் திரண்டு கிராம சபை கூட்டத்தினை ஒத்திவைக்க வேண்டும் என்று மாலை 5 மணி வரை போராடினர்.
இது சம்பந்தமாக சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் பாபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தினை நடத்தினர். நடந்த கூட்டத்திற்கு போதிய ஆதரவு இல்லை, கிராம சபை கூட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என கூறி புஞ்சை பாலதொழுவு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகுந்து பொது மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 10 மணி வரை பேராட்டம் நடந்தது.
அதன் பின்பு பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு தனியாக ஒரு பூட்டு போட்டு பூட்டி விட்டு சென்று விட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் புஞ்சை பாலதொழுவு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்