என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே விபத்தில் மூதாட்டி பலி
- திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையோரம் நடந்து சென்றபோது அவ்வழியே வேகமாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
- இதில் பலத்த காயம் அடைந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் சத்திரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகம்மாள் ( வயது 76). இவர் மேச்சலுக்குச் சென்ற மாடுகளை தேடிக்கொண்டு சென்றார்.
திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையோரம் நடந்து சென்றபோது அவ்வழியே வேகமாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி நாகம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த நாகம்மாளை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story






