என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊரையே காலி செய்து திருப்பதிக்கு சென்ற வசந்தபுரம் கிராம மக்கள்- பாதுகாப்பு பணியில் போலீசார்
    X
    ஒட்டுமொத்த மக்களும் திருப்பதி சென்ற நிலையில் வெறிச்சோடி கிடக்கும் வசந்தபுரம் கிராமத்தில் ஊராட்சி தலைவர் ரங்கநாதனும், 2 போலீசாரும் ரோந்து சுற்றி வந்த காட்சி.

    ஊரையே காலி செய்து திருப்பதிக்கு சென்ற வசந்தபுரம் கிராம மக்கள்- பாதுகாப்பு பணியில் போலீசார்

    • போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, வசந்தபுரம் கிராமத்தின் பாதுகாப்பிற்காக இரண்டு போலீசாரை நியமித்துள்ளார்.
    • ஊராட்சி தலைவர் ரங்கநாதனும் கிராமத்தில் அவ்வப்போது பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ளது வசந்தபுரம் கிராமம்.

    இந்த கிராமத்தில் சுமார் 45 குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் 4 வருடத்திற்கு ஒரு முறை ஊர் வழக்கப்படி ஊரில் உள்ள அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று வருவது வழக்கம்.

    அந்த வகையில் நேற்று வசந்தபுரம் கிராம மக்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். முதியோர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாத சிலர் மட்டுமே தற்போது அந்த கிராமத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் ஊரில் வசிக்கும் பெரும்பாலானோர் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றுவிட்டதால் கிராமமே வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதனையடுத்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, வசந்தபுரம் கிராமத்தின் பாதுகாப்பிற்காக இரண்டு போலீசாரை நியமித்துள்ளார்.

    அதேபோல் ஊராட்சி தலைவர் ரங்கநாதனும் கிராமத்தில் அவ்வப்போது பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்.

    மேலும் திருட்டு சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு, பகல் என போலீசார் ஊருக்குள் தொடர்ந்து ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.

    ஊரே மொத்தமாக காலி செய்து திருப்பதி கோவிலுக்கு புறப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    Next Story
    ×