search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்டலூர் பூங்காவில் ஊழியர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
    X

    வண்டலூர் பூங்காவில் ஊழியர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

    • வண்டலூர் பூங்காவில் ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது.
    • தொழிலாளர்களின் போராட்டத்தால் பூங்காவில் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு வைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கு ஒப்பந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பயோமெட்ரிக் முறையை, ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர்களை அவமரியாதையாக நடத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வண்டலூர் பூங்காவில் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் துணை இயக்குனர் காஞ்சனா, உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் முடிவு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் வண்டலூர் பூங்காவில் ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. உயிரியல் பூங்கா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சங்க பொதுச்செயலாளரும், ஏ. ஐ சி. யூ. டி.யூ மாநில சிறப்புத் தலைவருமான இரணியப்பன் தலைமையில் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தொழிலாளர்களின் இந்த போராட்டத்தால் பூங்காவில் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. போராட்டம் குறித்து பூங்கா ஊழியர்கள் கூறும்போது, பூங்காவில் உள்ள நிரந்தர ஊழியர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் ஒப்பந்த ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் முறை உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

    Next Story
    ×