search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்டலூர் அருகே பெண்ணின் உடல் முழுவதையும் கத்தியால் கிழித்த கும்பல்
    X

    வண்டலூர் அருகே பெண்ணின் உடல் முழுவதையும் கத்தியால் கிழித்த கும்பல்

    • மீனாட்சியின் முகம், தலை, கழுத்து உள்ளிட்ட உடல் முழுவதும் சரமாரியாக கிழித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
    • போலீசார் மேலும் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வண்டலூர்:

    வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் அண்ணா நகர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மீனாட்சி (வயது44).

    சம்பவத்தன்று இரவு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீனாட்சி தனியாக நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென மீனாட்சியிடம் ரகளையில் ஈடுபட்டனர். மேலும் 2 பேர் மீனாட்சியை தப்ப விடாமல் பிடித்து கொண்டனர். அப்போது மற்றொரு வாலிபர் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் மீனாட்சியின் முகம், தலை, கழுத்து உள்ளிட்ட உடல் முழுவதும் சரமாரியாக கிழித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் மீனாட்சி ரத்த வெள்ளத்தில் கதறி துடித்தார்.

    அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த தாக்குதல் நடந்துஇருப்பதாக தெரிகிறது. மீனாட்சி அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ.3 லட்சம் வரை கடன் கொடுத்து இருந்ததாக தெரிகிறது. பணத்தை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் தாக்குதல் நடந்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் மேலும் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×